பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு காட்டியமையால் அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி தரம் 11 இல் கல்வி கற்கும் நல்லூர் கொண்டலடி வைரவர் ஆலயத்திற்க்கு அண்மையாகவுள்ள 16 வயதான ஐங்கரன் அனுசியா என்பவர் நேற்று சனிக்கிழமை மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இன்று மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்க்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளார்கள்.
சிறுமியை முத்தமிட்டவர் கைது
யாழ்.சுண்டுக்குளி பகுதியில் 5வயதுச் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டவர் என்ற சந்தேகத்தில் 26வயதுடைய இளைஞன் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
நேற்று மாலை வீட்டு முத்தத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5வயதுச் சிறுமியை வெளியே அழைத்துச் சென்று குறித்த இளைஞன் அச்சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
உடனே அச்சிறுமி அதனை தாயிடம் வந்து கூறவே உடனே தாய் பொலிஸ் நிலையத்தில் இரவு 7மணியளவில் முறைப்பாடொன்றை பதிவு செய்தார். அதன்படி குறித்த பகுதியில் வசிக்கும் 26வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.