கோவில் வளவை துப்புரவு செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் படுகாயமடைந்திருந்த பூசகர்களான தந்தையும் மகனும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இதில் தந்தையான பாலசுப்பிரமணியக் குருக்கள் (வயது 62) மற்றும் அவரது மகனான சாந்தஸ்வரூபக் குருக்கள் (வயது 25) ஆகியோரே மரணம் அடைந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை வேளையில் தாம் பூசை செய்து வருகின்ற யாழ்.கந்தர் மடம் புகையிரத கடவைக்கு அண்மையில் உள்ள செம்பியன்தாழ்வு ஞானவைரவர் ஆலயத்தில் மேற்படி இருவரும் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அவ்வேளையில் மகன் குப்பைக்கு மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைக்க முயற்சித்து போது அவர் மீது மண்ணெண்ணெய் சிதறுண்டு தீ பரவியுள்ளது.
அதை கண்ட தந்தை தீயை கட்டுப்படுத்த முயற்சித்த வேளை தீ அவர் மீதும் பரவியதில் இருவரும் கடுமையான தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டி ருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருமே நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இருவரது சடலங்களும் மரண விசார ணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படை க்க ப்பட்டுள்ளன.
கள்ளுக்கு ஆசைப்பட்டு பறிபோன உயிர்
24-04-2016
முல்லைத்தீவு முள்ளியவளையில் பனை மரத்திலிருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் நடாத்திய புதுவருட நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பிய நிலையில் மரத்தில் ஏறி தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முள்ளியவளையை சேர்ந்த சுரேஸ்குமார் வராகன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மதுபோதைக்கு இளைஞர்கள் பலரும் அடிமையாகி வருவது கவலை அளிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.