இந்தச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணிக்கு அண்மித்த வேளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது கை மிகவும் சிதைவடைந்துள்ளது.
யாழில் சற்று முன்னர் விபத்து; இருவர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்!
குப்பிளான் வடக்குச் சந்தியில், இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி ஒன்றின்மீது வீதி விதிகளை மீறி வந்த பார ஊர்தி மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
யாழில் சற்று முன்னர் விபத்து; இருவர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்!
மேலும் பார ஊர்தியினை ஓடிச் சென்ற சாரதி அதிலிருந்து குதித்து தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தப்பியோடிய சாரதியைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.