யாழ்ப்பாணம் அரியாலையில் இன்று இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த, அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
மிகவும் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளார். இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் குறித்த இளைஞரின் உறவுகள் கதறியழுதவண்ணமுள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் குறித்த இளைஞரின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகிறது.