சுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கும்பலொன்று வீட்டில் இருந்த மூதாட்டி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் அடித்து நொறுக்கியதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் கந்தரோடை பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
முகங்களை மூடியவாறு வீட்டினுள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.