நீதிமன்ற தடையுத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவாஜிலிங்கம் போன்ற வடக்கிலுள்ளவர்களையும் கைது செய்வோம் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் அவர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவரிடம் தெற்கில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்வது போன்று வடக்கில் அவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஏன் கைது செய்வதில்லையென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”வடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டமென்று இரண்டு சட்டங்கள் கிடையாது. எந்த பகுதியானாலும் சட்டம் ஒன்றே.
இதனால் தெற்கில் உள்ளவர்களுக்கு என்ன சட்டம் இருக்கின்றதோ அதே அதே சட்டம் சிவாஜிலிங்கம் போன்றோருக்கும் செயற்படுத்தப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.