மதுபான விற்பனை நிலையங்களை இன்று (17) முதல் திறப்பதற்கு கலால் வரி திணைக்களம் அனுமதி
இன்று (17) முதல் வைன் ஸ்டோர்ஸ், பியர் கேன்கள் மற்றும் போத்தல் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளின் முன்பாகவும் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது
மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை.
திறந்த ஓரிரு நிமிடங்களில் நீண்ட வரிசை
தனிமைப்படுத்தல் ஊரங்கு உத்தரவை அடுத்த மாதம் முதலாம் வரை நீடிக்க கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணியால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான விற்பனை நிலையங்களை இன்று (17) முதல் திறப்பதற்கு கலால் வரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இன்று (17) அனுமதி வழங்கப்பட்ட உடனேயே, ஹட்டன் நகரில் திறக்கப்பட்ட மதுபானசாலையொன்றில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபான போத்தல்களை பெற்றுச் சென்றனர்.
அத்துடன், குறித்த மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.