யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மூன்று கடைகள் இன்று அதிகாலை வேளையில் உடைத்து பல லட்சம் ரூபா திருடப்பட்டுள்ளது.
கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு நகைக் கடை, சைக்கிள் விற்பனை நிலையம் என்பவற்றுடன் ஒரு களஞ்சியமும் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.
இரு கடைகளின் மேற்பகுதியை பிரித்து உள்ளிறங்கிய திருடர் கூட்டம் சைக்கிள் விற்பனை நிலையத்தில் நேற்றைய விற்பனைப் பணமான ஒரு லட்சத்து
80 ஆயிரம் ரூபா வங்கியில் வைப்புச் செய்யத் தயாராக இருந்த நிலையில் களவாடப்பட்டுள்ளது.
இதேபோன்று நகை கடையின் கூரையைப் பிரித்து உள்ளிறங்கிய திருடர்கள் அங்கிருந்த நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்தமையால் திருட முடியாது போகவே வெளியில் இருந்த கால் பவுண் நகையையும் குபேரன் முன்பாக
இருந்த ஒரு தொகைப் பணத்தையும் திருடியுள்ளனர்.
களஞ்சியத்தின் பின் கதவை உடைக்க முற்பட்ட போதும் எவையும் களவாடப்
படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
களவாடப்பட்ட இரு வர்த்தக நிலையங்கங்களிலும் சி.சி.ரிவி கமெரா பொருத்தப்பட்டுள்ள போதும் இரவு மின் இணைப்பை நிறுத்திச் சென்றமையால் அவை பதிவுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை தொடர்பில் யாழ். பொலஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து தடயவியல் பொலிஸார் சகிதம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.