இச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த வீட்டிற்கு இன்று அதிகாலை 2.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் முகமூடிகளை அணிந்து வாள்களுடன் சென்றுள்ளனர்.
இதன் போது வீட்டின் முன்பாக இருந்த மின்குமிழை அடித்து உடைத்ததுடன் வீட்டின் முன்பக்க கதவையும் வெட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் இரண்டு பேர் வாள்களுடன் வீட்டின் மதிலை பாய்ந்து உள்ளே நுழைந்துள்ளனர்.
இவ்வாறு வாள்களுடன் உள்ளே சென்றவர்கள் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினை முற்றாக அடித்து உடைத்துள்ளனர்.
இவ்வாறு கார் மற்றும் வீட்டை அடுத்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.