யாழ். அராலி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரிவு இடம்பெற்ற குறித்த விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையிலும் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்திலிருந்து மரத்துடன் மோதியே குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.