யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மூவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
கொடிகாமம் மத்தி, கெற்பெலி, அல்லாரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47, 70, 80 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 47 வயதான நபர் கொடிகாமம் சந்தைத் தொகுதிக்குள் தையலகம் வைத்திருப்பவர் என்று தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சாவகச்சேரி நகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.