ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் கடைசி நாளாகவும் அது அமைந்தது. அன்றைய இரவில் பிரேஸிலைச் சேர்ந்த ஜேடி துவார்ட்டே என் பவருடன் இரவைக் கழித்தார் யூசெய்ன் போல்ட்.
இவர்கள் இருவரும் நெருக்கமாகக் காணப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.
இப் புகைப் படங்களை ஜேடி துவார்ட்டேதான் வெளியிட்டார். எனினும், தற்போது தான் அவமானத்தினால் செத்துக்கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
பிரேஸிலின் பிரபல போதைப்பொருள் கடத்தல் புள்ளிகளில் ஒருவராக விளங்கிய டக்ளஸ் டொனாட்டோ பெரேய்ரா என்பவரின் விதவை மனைவியே ஜேடி துவார்ட்டே ஆவார்.
‘டைனா டெரர்’ என அழைக்கப்பட்ட டக்ளஸ் டொனாட்டோ பெரேய்ரா, தன்னை ‘பொலிஸ்காரர்களின் பயங்கரம்’ என வர்ணித்துக் கொண்டவர்.
கடந்த மார்ச் மாதம் பிரேஸில் பொலிஸாரால் அவர் சுட்டுக் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் மூலம் இரு பிள்ளை களின் தாயாகியவர் ஜேடி துவார்ட்டே.
தற்போது, யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்ததன் மூலம் சர்வதேச ரீதியில் ஜேடி துவார்ட்டே பிரபலமடைந்துள்ளார்.
ஆனால், இது குறித்து தான் மகிழ்ச்சியடையவில்லை என்கிறார் அவர்.
பிரேஸிலின் ‘எக்ஸ்ட்ரா’ எனும் பத்திரிகைக்கு அளித்த செவ்வியொன்றில், யூசெய்ன் போல்ட்டுடன் பிரபலமடைய வேண்டும் என நான் ஒருபோதும் விரும்பவில்லை.
யூசெய்ன் போல்ட் மிகப் பிரபலமானவர் என்பதை நான் அறிந்தி ருக்கவில்லை. அவருடன் இரவைக் கழித்தமை ஒரு பெரிய விவகாரமல்ல.
இவ் விடயம் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனெனில் இவ் விடயத்தை சிக்கலாக்க நான் விரும்பவில்லை.
இது தொடர்பில் மக்களிடமிருந்து வந்த கருத்துகள் மிக எதிர்மாறானவையாக உள்ளன. நான் அவமானத்தில் சாகிறேன்’ எனக் கூறியுள்ளார்.