நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ‘இது வெறும் அரசியல் அறிவிப்பு தான். வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை.
ஏன் என்றால் அவர் படிப்பறிவில்லாதவர். ஊடகம் தான் இவற்றை பெரிதாக காட்டுக்கிறது. தமிழக மக்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சியின் பெயரையும், வேட்பாளர்களையும் அறிவிக்கட்டும். நான் அவரை பற்றி அம்பலப்படுத்துகிறேன்’ ’ என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.