புத்தளம் மதுரங்குளி பகுதியில் ரயிலுடன் கன்டேனர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று (20) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொழும்பு – புத்தளம் நோக்கி வந்த ரயில், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கி வந்த வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கன்டேனர் பயணித்த அதன் சாரதியுடன் மற்றுமொருவரும் ரயில் சாரதி மற்றும் அவரது உதவியாளரும் காயமுற்று புத்தளம் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.