காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது அலுவலக பெயரில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை சமூக வலைதளத்தில் இயங்கி வருகிறார். அவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு (@OfficeOfRG) ஹேக்கிங் செய்யப்பட்டு, காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தினரை பற்றி ஆபாசமான வார்தைகளை கொண்டு தவறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இன்று இரவு கிட்டதட்ட 8.45 மணிக்கு பிறகு சில மர்ம நபர்கள் அவரது டிவிட்டர் பக்கத்திற்குள் அத்துமீறி ஊடுருவி ஆபாச வார்த்தைகளையும், கெட்ட வார்த்தைகளையும் பதிவிட்டுவருவதாக, அவருடைய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து ஹேக்கிங் பிரச்சனைகளை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் துணைத் தலைவரின் டுவிட்டர் பக்கமே ஹேக்கிங் செய்யபடுவதால், நாட்டில் உள்ள மற்றவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என்று அக்கட்சியின் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தொடர்ச்சியான அதிர்ச்சியான டுவிட் பதிவுகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.