வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண சபையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (14) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் இன்று (15) விசப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், வடமாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் நியமனம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமான தொண்டராசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.