82 வயதான மூதாட்டியுடன் தகாத உறவு பேணிய 38 வயதான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேகாலை, தெரனியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரலங்கட கிராம தமிழ் பாடசாலையின் ஊஞ்சல் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கி குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
38 வயதான சின்னையா மோகன் என்ற நபரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த நபர் அயல் வீட்டில் வதியும் 82 வயதான மூதாட்டி ஒருவருடன் தகாத உறவு பேணி வந்துள்ளார்.
இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்ததனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் தலைமறைவாகியிருந்த நபர் இறுதியில் பாடசாலை ஊஞ்சல் தூண் ஒன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரனியகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://divaina.com/daily/index.php/pradeshiya-puwath/5278-2017-12-28-15-20-13