பாடசாலை மாணவி ஒருவர் விளையாட்டு பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ள அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூர்த்தி அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – மண்டைத் தீவு பிரதேசத்தினை சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவரே இந்த சம்பவத்தில் அதிகாரியிடம் சிக்கியுள்ளார்.
சந்தேக நபரான சமூர்த்தி அதிகாரி நேற்றைய தினம் யாழ்ப்பாண காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமிக்கு கடந்த 12 ஆம் திகதி மண்டைத் தீவு – கிராமசேவை பிரிவு அதிகாரிகளினால் விளையாட்டு பயிற்சி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி அத் தினத்தில் சென்றுள்ளதுடன், விளையாட்டரங்கில் உள்ள அறை ஒன்றில் வைத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மண்டைத் தீவு பிரதேச செயலாளர் பிரிவிற்கு தகவல் சென்றுள்ளதுடன், பிரதேச செயலாளர் இது குறித்து காவற்துறையில் முறைப்பாடு செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவற்துறையில் முறையிட்டுள்ளதுடன், குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.