அமெரிக்காவில் 13 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு கர்ப்பமடைந்த குற்றச்சாட்டில் முன்னாள் ஆசிரியையான யுவதி ஒருவருக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அலெக்ஸாண்ட்ரா வேரா எனும் இந்த யுவதி, டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றியவர்.
இவர் அப் பாடசாலையின் மாணவனான சிறுவன் ஒருவனுடன் நீண்டகாலமாக பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.
அம் மாணவன் 13 வயதானவனாக இருந்தபோது, அவன் மூலம் அலெக்ஸாண் ட்ரா வேரா கர்ப்பிணியானதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இவ் வழக்கில், அலெக்ஸாண்ட்ராவுக்கு 30 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருந்தது. எனினும், வழக்கு விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டை அலெக்ஸாண்ட்ரா வேரா ஒப்புக்கொண்டார்.
தனது சட்டத்தரணி ரிக்கார்டோ ரொட்ரிக்ஸுடன் அலெக்ஸாண்ட்ரா வேரா
அதேவேளை, அவர் ஏனைய சிறுவர்களுக்கு ஆபத்தானவராக இல்லை என்பதையும் நீதிபதி மைக்கல் மெக்ஸ்பாடென் ஏற்றுக்கொண்டார். எனினும், இவ்
விடயத்தில் சமூகத்துக்கு ஒரு தகவலை தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, அலெக்ஸாண்ட்ரா வேராவுக்கு 10 வருட கால சிறைத் தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
“கல்வி போதிப்பவர்கள் எமது பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். பிள்ளைகள் மீது அவர்கள் கைவைக்கக் கூடாது” எனவும் நீதிபதி மைக்கல் மெக்ஸ்பாடென் தெரிவித்தார்.