2014: 24 வருடங்களின் பின் யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகியது
1582 : கிறகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1792 : வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வொஷிங்டன், டிசியில் நடப்பட்டது.
1884 : சர்வதேச நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள “கிறீன்விச்” தெரிவு செய்யப்பட்டது.
1923 : துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
1943 : ஜேர்மனிக்கு எதிராக புதிய இத்தாலிய அரசு போர்ப் பிரகடனம் செய்தது.
1944 : இரண்டாம் உலகப் போரில் லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.
1946: பிரான்ஸில் நான்காவது குடியரசு அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது.
1970 : ஐ.நாவில் பிஜி இணைந்தது.
1972 : ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு அருகில், வெளியில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
1972 : உருகுவே விமானம் ஒன்று ஆர்ஜென்டீனாவுக்கும், சிலிக்கும் இடையில் அந்தீஸ் மலைகளில் டிசம்பர் 23 ஆம் திகதி மோதியதில் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
1976 : பொலீவியாவைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று பொலீவியாவின் சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.
1990 : லெபனான் மீது சிரியப் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன.
2010 : சிலி சுரங்க விபத்தொன்றில் சிக்கிய, 33 தொழிலாளர்கள் 69 நாட்களின்பின் மீட்கப்பட்டனர்.
2013 : இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பாலமொன்றுக்கு அருகில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர்.
2014 : 1990 ஆம் ஆண்டு முதல் யாழ் தேவி ரயில் சேவை வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்திய உதவியுடன் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டதையடுத்து 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.