மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் வர்தா புயலாக உருமாறி வந்துவிட்டதாக நெட்டிசன்கள் கிலி கிளப்பி வருகிறார்கள். இதற்கு காரணம் ‘சின்னம்மா’ எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வர்தா புயல் காரணமாக மக்கள் ஒரு பக்கம் அவதிப்படும் நிலையில், 22 வருடங்களாக சென்னையை மையம் கொண்டு கரையை கடக்காத புயல் இவ்வாண்டு அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் சென்னையில் கரையை கடப்பதை பல்வேறு நெட்டிசன்களும் பல்வேறு வகையில் வர்ணனை செய்து வருகிறார்கள்.
சென்னையில் வர்தா புயல் தாக்கத்தால் மரங்கள் பல வேரோடு சாய்ந்துள்ளன. மழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
புயல்/மழை. அதற்குக் கூடத் தெரிந்திருக்கிறது அம்மா பற்றி. ஜெய் ஜெயலலிதா. *யாருப்பா அது மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா அவர்களை அடக்கம் செய்ததால் புயல் கூட இங்கே வர பயப்படும் என்று சொன்னது? ஒரு வாரத்திற்குள் புயல் வந்துவிட்டது பாருங்கள். இவ்வாறெல்லாம் நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.