வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்ற அங்கு ஒரு பெண் அடியார் தூக்கு காவடி எடுத்து தனது நேர்த்தி கடனை நிறைவேற்றி உள்ளார்.
இவர் கடந்த மூன்று வருடங்களாக இந்த நேர்த்தி கடனை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நிறைவடைந்து நாடகள் பல ஆனாலும் இப் பெண்ணின் பக்திக் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் தீயாக பரவி வருகிறது.
துாக்கு காவடி என்பது இந்துக்களின் நேர்த்திக் கடன்களுக்குள் மிகவும் கடினமானது அப்படி இருக்கையில் இப் பெண்ணின் பக்தி கண்டு பல முகநுால் நண்பர்கள் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது…