யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்த ராசா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் நேற்றுகாலை உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகசபையின் தலைவர் பதவியிருந்து தான் ஜூலை 31ஆம் திகதியுடன் விலகப்போவதாக கடந்த தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், அன்டிஜன் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைபெற்றுவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.