பிரிட்டனில் உள்ள 47 வயது பெண் ஒருவர் தனது வாழ்க்கைத்துணையாக ஒரு நாயை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்.
200 பேர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருமணத்தை நடத்திய அந்த பெண், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தற்போது நான் பாதுகாப்பாக இருப்பதாக தான் நினைப்பதாகவும், இதைத்தவிர வேறு எதையும் நான் எனது வாழ்க்கைத்துணைவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
பிரிட்டனை சேர்ந்த Amanda Rodgers என்ற 47 வயது பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தற்போது Sheba என்ற பெயருடைய அவர் வளர்த்து வந்த நாயை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 200 பேர் முன்னிலையில் Split, Croatia என்ற இடத்தில் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய Amanda Rodgers, நான் என்னுடைய 20வயதில் ஒருவரை திருமணம் செய்தேன்.
ஆனால் அந்த திருமணம் ஒருசில மாதங்களிலே முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் கடந்த பல வருடங்களாக தனிமையில் வாழ்ந்த எனக்கு இந்த இந்த நாய்தான் உற்ற துணையாக இருந்தது.
எனவே தான் என்னுடைய வாழ்க்கை துணையாக இந்த நாயை ஏற்றுக்கொண்டேன். இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் தற்போது மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்.
மேலும் என்னுடைய வாழ்க்கைத்துணையிடம் இருந்து வேறு எதையும் நான் எதிர்பார்த்து இந்த திருமணத்தை நடத்தவில்லை’ என்று கூறினார்.
நாயுடன் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.