வவுனியா விளக்குவைத்த குளத்தில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் இன்று காலை (08) மோதுண்டதில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர்.
பளையில் இருந்து காலை 6.50 மணக்கு கொழும்பு நோக்கி சென்ற சொகுசு ரயிலிலேயே மோட்டார் சைக்கிள் மோதுண்டுள்ளது.
வவுனியா சுந்தரபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சத்தியசுதன் வயது 32 மற்றும் அவருடைய மகனான சத்தியசுதன் டினோயன் ஆகியோர் மோதுண்டு பலியாகியுள்ளனர்.
உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் சாரதி மனைவியை விளக்கு வைத்தகுளத்தில் ஏ9 பதையில் இறக்கி விட்டு தானும் மகனும் மாற்று வழியினூடாக வவுனியாவை சென்றடையும் நோக்கோடு ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
சம்பவ இடத்தில் இருந்து இருவரது சடலமும் ரயிலில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.