வவுனியாவில் நேற்று இரவு 8.30 மணியளவில் மன்னார் வீதி வேபங்குளம் பகுதியில் மது போதையில் விழுந்து கிடந்த முதியவரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பொலிஸார் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து பொலிசாரின் மனிதாபிமான செயற்பாட்டினை அப்பகுதிமக்கள் வெகுவாக பாராட்டியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரோந்து நடவடிக்கையை மேற்கொண்ட வவுனியா நெளுக்குளம் பொலிசார் வீதியில் வீழ்ந்து கிடந்த வயோதிபரைத் தூக்கி நிறுத்தியதுடன் அவருக்கு குடிப்பதற்கு தண்ணீர் வழங்கியுள்ளார்.
பின் அவரின் உறவிர்களின் விபரங்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் தமது மோட்டார் சைக்கிலில் குறித்த வயோதிபரை ஏற்றிச் சென்று அவருடைய இடமாக பண்டாரிகுளம் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் அவரது வீட்டில் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் நெளுக்குளம் பொலிசாரின் மனிதாபிமான செயற்பாட்டினையும் பொலிசாரில் இவ்வாறான நற்பண்புகளுடன் உடையவர்களும் இருக்கவே செய்வதாகவும் அவர்களின் சேவையினையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.