வவுனியாவில் 10 வயது சிறுமி ஒருவர் மீது துஸ்பிரயோக முயற்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் முயற்சியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி ஒருவரை அழைத்து அயல்வீட்டு 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட போது சிறுமி கதறிக் கொண்டு தப்பியோடியதை அடுத்து சிறுமியின் வீட்டுக்கு தகவல் தெரிந்தமையால் துஸ்பிரயோக முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபரான 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் 15வயது பாடசாலை மாணவி ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
06-03-2016
வவுனியா புதுக்குளம் பகுதியில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த பாடசாலை மாணவி நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்
குறித்த பாடசாலை மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் காதலிப்பதாக கூறி கடந்த ஆண்டிலிருந்து மாணவியை பின்தொடர்ந்து வந்துள்ளார். மாணவியும் இளைஞனின் வார்த்தைக்கு இடம் கொடுத்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு குறித்த இளைஞனை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.