வவுனியாவில் இன்று 2017-12-21 மதியம் 12.00 மணியுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்திருந்த நிலையில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கே. அரவிந்தராஜ் மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.
2018-12-21 திகதிவரை வேட்பு மனு காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 12 கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களுமாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
வவுனியா நகரசபைக்கு 10 கட்சிகள் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தது.
தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும், அதேபோன்று வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபைக்கு 4 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும், வெண்கலச் செட்டிக்குளம் பிரதேசசபைக்கு 8 கட்சிகள், மொத்தமாக 45 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வவுனியா வடக்கின் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 2018 மாசி 10 ஆம் திகதி இலங்கை முழுவதும் நடைபெறும். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 56 வட்டாரங்களில் 148 வாக்கெடுப்பு நிலையங்களில் இத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
இத் தேர்தல் சட்டரிதியாகவும் ஒழுங்கான முறையிலும் நடைபெறவிருப்பதற்காக பொலிஸ் திணைக்களம் அதே போன்று ஏனைய அனைத்து கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் சட்டத்தை நிலைநாட்டுவதோடு சட்டவிரேதமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை எனவும் தேர்தல் திணைக்களத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளார்கள் வேட்பாளர்கள் சிலர் தங்கள் படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்யாத நிலையில் அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்பு மனுக்கள் ஏற்பு – 2 நிராகரிப்பு!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை யாவும் இன்று வியாழக்கிழமை நண்பகலுடன் முற்றுப்பெற்றன.
அதனைத் தொடர்ந்து ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக ஒன்றரை மணித்தியாலம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தொடர்பான இறுதி அறிவிப்பை விடுக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்-
”மட்டக்களப்பு மாநகரசபைக்கு 12 கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களுமாக 17 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 16 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே இதற்கு காரணமாகும்.
காத்தான்குடி நகரசபைக்கு 8 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்ததோடு, அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக 9 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், அவை யாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களுமாக 11 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் பத்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேசிய மக்கள் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பெண் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தமையே இதற்குக் காரணம்.
மேலும், மண்முனை தென் எருவில் பற்றுக்கு ஐந்து கட்சிகளும் 1 சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருந்தன. அவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு 7 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததோடு, அவை யாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்கு ஏழு கட்சிகளும் 1 சுயேட்சைக்குழுவுமாக 8 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக 7 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களுமாக 9 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன. அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இவ்வாறு 8 உள்ளுராட்சி சபைகளுக்கும் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், அவற்றில் 79 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.