வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து 19 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி இன்று (11) காலை முதல் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போதே, கிணற்றிலிருந்து யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.