வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஏ9 வீதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக கிளிநொச்சியிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வவுனியா நகர் பகுதியிலிருந்து தோணிக்கல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டே இல் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் படு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.