அயல் வீட்டிலிருந்த கோழியைத் திருடி வேறொரு இடத்தில் விற்பனை செய்யச் சென்ற இரு இளைஞர்கள் அங்கிருந்த கையடக்கத் தொலைபேசியை திருடிச் சென்ற போது கைது செய்யப்பட்ட சம்பவம் வாழைச்சேனையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடைப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களின் பக்கத்து வீட்டிலிருந்த கோழியை திருடி அதனை விற்பனை செய்வதற்காக ஓர் இடத்துக்குச் சென்றுள்ளனர்.
குறித்த நபர்கள் கொண்டு வந்தது களவாடப்பட்ட கோழி என்று தெரியாதவர், கோழியை பெற்றுக் கொண்டு பணத்தை உள்ளே எடுக்கச் சென்றபோது அங்கிருந்த கைத்தொலைபேசியை குறித்த இரு இளைஞர்களும் திருடியுள்ளனர்.
இதனை அவதானித்துக் கொண்டிருந்த சிலர் இருவரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் கொண்டு வந்த கோழியும் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.