வடகொரிய பொதுமக்கள் நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்கு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பொதுமக்களை பல்வேறு வழிகளில் அச்சுறுத்தி லஞ்சம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சுயதொழில்களில் ஈடுபடுகின்ற மக்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த அறிக்கை வெறுமனே அரசியல் நோக்கில் போலியாக தயாரிக்கப்பட்டது என வடகொரியா அறிவித்துள்ளது.