புதுடில்லி:தலைநகர் டில்லியில், பொதுமக்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், ‘மேக் – அப்’ உடன், பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சாலைகளில் வலம் வந்துஅசத்தியுள்ளார்.
திரைப்பட இயக்குனர் சூஜித் சர்க்காரின் புதிய இந்திப் படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார். தற்போது, டில்லியில், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், காக்கி டிரவுசர், தொள தொள சட்டை, முகத்தை பாதி மூடக்கூடிய முகமூடி அணிந்து, வித்தியாசமான, ‘மேக் – அப்’ உடன், டில்லி நகர சாலைகளில், அமிதாப் பச்சன் உலா வந்தார்.
மக்கள் நெருக்கடி மிக்க சாலைகளில், பொதுமக்களை உரசியபடி, அவர் சென்றபோதும், யாரும் அவரை, அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
இதுகுறித்து, இணையதளத்தில், அமிதாப் பச்சன் கூறியுள்ளதாவது:திறமை வாய்ந்த கலைஞர் செய்த, வித்தியாசமான, ‘மேக் – அப்’ உடன், டில்லி மாநகரின் நெரிசல் மிக்க சாலைகளில் உலா வந்தேன்.
ஒரு காலத்தில் எளிதில் அடையாளம் காணக்கூடியவனாக இருந்த என்னை, தற்போது யாரும் அடையாளம் காணாதது, ஆச்சரியமாக இருந்தது. இவ்வாறு அமிதாப் பச்சன்
கூறியுள்ளார்.