வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கலகுண்டாமடு குளத்தினுள் வீழ்ந்து மூழ்கியுள்ளது.
எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாகச் செயற்பட்டு வானிலிருந்து கீழே இறங்கியமையால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த வேனில் நான்கு பேர் பயணித்த நிலையில் சிறு காயங்களிற்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.