மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட காலப்பகுதியில் மேற்கொண்ட விமான பயணங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை அண்மையில் பொலிஸ் பிரிவொன்றினால் பெற்றக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைகளுக்கமைய சில காலங்கள் முன்னாள் பொது மக்கள் தொடர்பு தொடர்பிலான அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்து பல வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த அனைத்து விமான பயணங்களும் நீண்ட விமான பயணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசியமற்ற இராஜதந்திர பயணங்களுக்காக மேர்வின் சில்வா கலந்துக் கொண்டமை தொடர்பில் விசாரணை குழுவினால் ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளது.
இதன் போது வித்தியாசமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஜோதிடர் ஒருவர் ஒருவகை கிரக பலன் காரணமாக விமான விபத்தொன்றுக்கு முகம் கொடுக்க நேரிடும் என மஹிந்தவிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவதானமாக இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான விபத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கென்றால் நீண்ட ஆயுள் கொண்ட நபரை பயணங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு குறித்த ஜோதிடர் மஹிந்தவுக்கு அறிவித்துள்ளார்.
இதனால் மஹிந்த ராஜபக்ஷ பலவந்தமாக மேர்வின் சில்வாவை வெளிநாட்டு சுற்றுலா பயணங்களின் அழைத்து சென்றுள்ளார். இதனை அறிந்துக் கொண்ட மேர்வின் சில்வா சில காலங்கள் மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.