நீல்ஸ் ஹோகொல் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு ஆண் செவிலியர். ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார் இவர்.
டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க முயற்சி செய்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கடந்த 2005-ஆம் ஆண்டு கையும் களவுமாகச் சிக்கினார்.
அதையடுத்து ஜெர்மனியின் வரலாற்றில் மிகப்பெரிய தொடர் கொலைகாரராகக் கருதும் அளவிற்கு 2000ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளில் 300 பேர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சிலர் சந்தேகிக்கின்றனர்.
நீல்ஸ் ஹோகொல்
இருப்பினும், ஜெர்மனி, துருக்கி மற்றும் போலந்தில் 130க்கு மேற்பட்ட உடல்களை அகற்றும் அதிகாரிகளின் விசாரணை சவாலாக மாறியுள்ளது. இதை மருத்துவமனை கண்டு கொள்ளாமல் இருந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.
அதோடு எதற்காகக் கொன்றார் என்பதை கண்டுபிடிக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். அதிகாரிகள் ஹோகொலிடம் விசாரித்ததில் 43 பேரை கொன்றதாக ஒப்புக் கொண்டார். 5 பேரைக் கொன்றதை மறுத்துள்ளார்.
கொலையாளியின் எண்ணிக்கை மற்றும் அதற்கான நடவடிக்கைளைச் குறித்து ஜெர்மனியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. ஹோகொலுக்கு எதிராகச் சாட்சி கூறிய முன்னாள் சக ஊழியரான பிராங் லாக்ஸ்டர்மன், கொலை செய்த குற்றத்திற்காக ஹோகொல் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
2006 இல் இருந்து நடந்து வரும் விசாரணை தற்போது மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விசாரணையில் மேலும் 100 நோயாளிகளைக் கொன்றதற்கான குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஹோகொலின் சீனியர் ஊழியர்களை உட்படுத்த வேண்டும் எனத் தலைமை நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்களும் ஆஜராகினர்.
அவர்கள் நீதிமன்றத்தில் பொய் கூறியதால் வழக்கில் எதோ மர்மம் உள்ளது எனச் சந்தேகிக்கின்றனர். அதுமட்டுமின்றி மருத்துமவனையின் அதிகாரிகள் கண்டுகொள்ளாததும் பல்வேறு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு சீனியர் செவிலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து ஜூன் மாதம் நீதிமன்றம் தனது வழக்கில் முடிவை அறிந்த பிறகு ஹோகொலின் விசாரணையில் சாட்சியமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.