தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்சவின் செயற்பாடுகளில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் வீட்டில் இடம்பெற்ற மரணம் தொடர்பில் பதற்றம் அடைந்துள்ளதாகவும், அதனால் கட்சி நடவடிக்கைகளை புறக்கணித்து வருவதாக கூட்டு எதிர்கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் விமல் வீரவன்சவின் வீட்டில் உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் அவரது மனைவி செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வீரவன்சவின் மனைவிக்கும் உயிரிழந்த இளைஞனுக்கும் இடையில் தவறான உறவு முறை இருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனால் வீரவன்ச பெரிதும் கலக்கமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் மனைவி தொடர்பாக தவறான செய்தி வெளியாவதை தடுக்கும் நடவடிக்கையில் வீரவன்ச தீவிரமாக செயற்பட்டு வருகிறார். இதற்காக நீதியமைச்சரின் உதவியை வீரவன்ச நாடியுள்ளார். இதனால் கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.
வீரவன்சவின் வீட்டில் 24 வயதான இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அதிகளவான வயக்கரா மாத்திரைகளை பயன்படுத்தியமையால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத அறிக்கையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு தொடர்பில் வீரவன்சவின் மனைவி குற்றவாளியானால், குறைந்தபட்சம் 5 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
இந்நிலையில் இளைஞனின் மரணம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக விமல் வீரவன்ச, நீதி அமைச்சரின் உதவியை பெற்று வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.