வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார்.
இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில், ட்ரம்ப் தனது மகள் இவான்காவுடன் கலந்துகொண்டார்.
தீபாவளிக் கொண்டாட்டத்தை ட்ரம்ப், குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். ட்ரம்ப் அமைச்சரவையில் அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியர்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், ட்ரம்ப் நிர்வாகத்தில் முக்கியப் பதவி வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலே, சீமா வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைச்சருக்கு இணையான அந்தஸ்து பெற்றுள்ள நிக்கி ஹேலே, ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதராகப் பதவி வகிக்கிறார்.
தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் ட்ரம்ப் தெரிவித்துக்கொண்டார்.
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்தபோது, வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாடும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொள்வார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகராக இருக்கும் அவரின் மகள் இவான்கா, கடந்த ஆண்டு தீபாவளியின்போது வர்ஜீனியா மற்றும் ஃப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் இருக்கும் இந்துக் கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.
அப்போது, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருந்தார்.