வேலணையில் வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்றின் தொழிலாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர் பணியாற்றிய பகுதியில் உள்ள கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வீதியமைப்பு பணிகளில் ஈடுபட்ட ஊர்காவல்துறை சுகாதார வைத்திய அதிகாரி பகுதியை சேர்ந்த 25 குடும்பங்களை தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட குடும்பத்தினருடன் தொடர்பிலிருந்த வர்த்தகர்கள் கடை ஊழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலணை புளியங்கூடல் சந்தி தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.