எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது.
‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து.
இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும்.
அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.
தொடர்ந்த…
இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார்.
மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது’ என்பதுதான்.
சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார் .
அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன.
இந்நிலையில், ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார்.
இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள்.
மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்’ என்றார் வைகோ .. குழம்பிப் போனார் நடேசன்.
செய்தி பிரபாகரனுக்கு தெரிவிக்கப் பட்டது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.
அதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள்.
அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள்.
இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார். ஆனால் தேர்தலுக்காக இந்தியா நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருந்தது அங்கு யாருடனும் காத்திரமாக பேசமுடியாத நிலை .
மே மாதம் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர் முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்து கடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தார்கள்.
அவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.
அது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.
அதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
ஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.
எனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.
அதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன், நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள் பட்டியல் நீளமானது.
தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான் அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே..
தமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து.
பின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம் தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.
சிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.
இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை.
புலிகளின் தலைமையும் சுமார் ஒரு லட்சம் மக்களும் சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் சுற்றி வளைக்கப் பட்டு பெட்டியடிக்கப் படுகிறார்கள்.
புலிகளின் தலைமை தங்கள் சுற்றி வளைப்புக்குள் அகப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த இராணுவம் அப்போ ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்த மகிந்தா ராஜபக்சேவுக்கு தகவல் அனுப்புகிறார்கள்.
அவசரமாக நாடு திரும்பிய மகிந்தா முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டேன் என்று விமான நிலையத்திலேயே நிலத்தில் விழுந்து மண்ணை முத்தமிடுகிறார்.
அடுத்த நாள் இரவு நான்கு பக்கமும் இராணுவத்தால் சூழப்பட்ட நிலையில் நந்திக்கடல் பகுதியில் சுமார் இருபது படகுகளில் கடற் புலிகள் மற்றும் கரும்புலிகள் பிரபாகரனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டுமென எந்த இலக்குமற்று ஒரு ஊடறுப்பை நடத்துகிறார்கள் .. அந்தச் சண்டையில் பிரபாகரன் இறந்து போகிறார்.
அவர் சண்டையில் இறந்தாரா தற்கொலை செய்தாரா என்பது இன்றுவரை தொடரும் சர்ச்சை காரணம் அவருடன் இறுதியாக நின்றிருந்த எவரும் உயிரோடு இல்லை
..மே 18ஆம் தேதி காலை இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தது.
அன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது.
ஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.
நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.
அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய, மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.
அதே நேரம் அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் புலிகளோடு பேச்சுவார்த்தை மேசையில் தீர்வை வைத்து அது சரிவராத பட்சத்தில் அவர்களை முற்றாக அழித்து இலங்கைத் தீவில் ஆயுத மோதலை கொண்டுவருவதற்காக உலக நாடுகள் பெரும்பாலானவை 2001 ம் ஆண்டு மிக நுணுக்கமாக திட்டமிட்டு நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள்.
அதில் பெரும்பங்கு மேற்குலகத்தினுடையது. இங்கு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலென்ன பி.ஜே .பி இருந்தாலென்ன எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடியே தான் நடந்து முடிந்திருக்கும்.
இங்கு உலகமயமாக்கல், புதிய பொருளாதாரக்கொள்கை, சர்வதேச அரசியல் என்று அவைகளைப் புரிந்து அதன் நெளிவு சுளிவுகளோடு தம்மை நம்பிய மக்களின் அபிலாசைகளை அரசியல் ரீதியாக வென்றெடுத்து தங்களையும் பாதுகாத்து பயணிக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அத்தனையையும் தட்டி விட்டு..
உலகத்தில் எவரையுமே நம்பாது கொண்ட கொள்கைக்காக இறுதிவரை ஆயுதத்தையே நம்பி தாங்களும் அழிந்ததோடு ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலத்தையும் சூனியத்தில் தள்ளி விட்டு சென்றது மட்டுமல்லாமல் உலகத்திலேயே விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கிய அனைத்து குழுக்களுக்கு முன்னுதாரணமா இருந்தது மட்டுமல்லாது முப்படைகளையும் கட்டியெழுப்பி ஒரு நிழல் அரசையும் நடத்திக்காட்டியதோடு மட்டுமல்லாமல்.
தோற்றுப் போய் இப்படியான ஒரு மோசமான அழிவை சந்திக்கக் கூடாது என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக புலிகள் அமைப்பு எப்போதும் வரலாற்றில் எழுதி நிக்கும.
..பிரபாகரன் என்கிற பெயர் என்றென்றும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு குறியீடு ….
இந்த வாய்ப்பை எனக்களித்த புதிய தலைமுறை ஆசிரியர் குழுமத்துக்கு நன்றிகள் அன்புடன் சாத்திரி ..