புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ள ராம்குமாரின் பேஸ்புக் பக் கத்தில் அவருடைய பெயரிலேயே புதிய வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி காலை ஐடி ஊழியர் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் ராம் குமாரை போலீஸார் கைது செய் துள்ளனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புழல் சிறையில் உள்ள ராம்குமாரின் பேஸ்புக் பக் கத்தில் அவருடைய பெயரிலேயே “ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா” என்ற தலைப்பில் பல்வேறு கேள்வி களுடன் ஒரு வீடியோ பதிவேற்றப் பட்டுள்ளது.
மேலும் இந்த பதிவில் வழக்கறிஞர் ராம்ராஜ் மூலமாக புழல் சிறையில் ராம்குமாரிட மிருந்து அவருடைய பேஸ்புக் பாஸ்வேர்ட் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை 450-க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ராம்ராஜிடம் கேட்டபோது, “ராம் குமாருக்கு நான் மட்டும் வழக் கறிஞர் அல்ல. 17 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு உள்ளது.
ஆதாரங்களை திரட்டுவதற்காக சிறையில் ராம்குமாரை சந்தித்த போது அவருடைய பேஸ்புக் பாஸ் வேர்டை வாங்கினேன். அந்த பாஸ் வேர்ட் குழுவினரிடம் கொடுக்கப் பட்டது.
ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் நான் எந்த பதிவையும் போடவில்லை.
ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக் நண்பர்கள் அல்ல. சுவாதி கொலை செய்யப் பட்ட பிறகு, மற்றவர்கள் சுவாதியை பேஸ்புக்கில் தேடியது போல் ராம்குமாரும் தனது பேஸ்புக் பக்கத்தில் தேடியுள்ளார். இதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் கிடைக்க வில்லை” என்றார்.
இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை போலீஸ் முடக்கவில்லை. சுவாதி யின் உறவினர்கள் தான் முடக்கி னர். ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தையும் போலீஸ் முடக்காது. ராம்குமாரை சேர்ந்தவர்கள் தான் முடக்க வேண்டும்” என்றார்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
ராம்குமாருக்கு வழங்கப்பட் டுள்ள நீதிமன்ற காவல் இன் றுடன் முடிகிறது. இதனால் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வருகின்றனர்.
சக கைதிகளுக்கு பாட்டு பாடி காட்டிய ராம்குமார்
தையல் பிரிக்கப்பட்ட பின்பு புழல் சிறையில் தன்னுடன் இருக்கும் இரு கைதிகளிடம் ராம்குமார் பாட்டுப் பாடி காண்பித்துள்ளார்.
சுவாதி(24) கொலை வழக்கில் ராம்குமாரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.
அவரது கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டன. மன அழுத்தத்தில் இருக்கும் ராம்குமாரை தனி அறையில் அடைத்தால் மனதளவில் பிரச்சினைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியதால், ராம்குமாருடன் மேலும் இரு கைதிகளை அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புழல் சிறைச்சாலை மருத்துவமனையில் ராம்குமாரின் கழுத்தில் தையல்கள் பிரிக்கப்பட்டன.
ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறை அறைக்கு வெளியே 3 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தையல் பிரிக்கப்பட்ட பின்பு தன்னுடன் இருக்கும் இரு கைதிகளிடம் ராம்குமார் பாட்டுப் பாடி காண்பித்துள்ளார்.
வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…