கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் சி.சி.டி.வி காட்சி தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு மருநாள் 22 ஆம் திகதி பாசிகுடாவிலுள்ள உணவகம் ஒன்றில் சில சவுதி அரேபியர்களை சந்தித்த சர்சைக்குரிய கணொளி ஒன்று வெளியாகியது.
இந்நிலையில் குறித்த சி.சி.ரி.வி காட்சியில் காணப்படும் சந்திப்பு உத்தியோகப்பூர்மானது என ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளதோடு,இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.