தாய்லாந்தில் உள்ள 65 வயது பெண் வித்தியாசமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் அங்குள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு சென்று 1000க்கும் மேல் முதலைகள் இருக்கும் ஒரு குளத்தில் விழுந்தார்.
அதில் இருந்த முதலைகள் அவரை கடித்து குதறிய பயங்கரமான காட்சியை கண்டு மிருகக்காட்சி சாலைக்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு வந்த Wanpen Inyai என்ற 65 வயது பெண், சுமார் 1000 முதலைகள் உள்ள குளம் அருகே அதிக நேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென அந்த குளத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் விழுந்தார். அந்த குள்ளத்தை சுற்றி நின்றுகொண்டு முதலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
குளத்தில் இருந்த முதலைகள் கீழே விழுந்த பெண்ணை கடித்து குதறிய அகோர காட்சியை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கீழே விழுந்த பெண் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Police said they arrived at the scene to find zoo keepers and staff desperately trying to ward off dozens of reptiles which were feasting on her body (file picture not related to Samut Prakarn Crocodile Farm & Zoo)