பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாக இதன் மூலம் சர்கோசி பதிவாகியுள்ளார்.
இவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கவோ அல்லது சிறையில் அடைக்கப்படவோ கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
59 வயதாகும் இவர், கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹொலன்டேயிடம் தோல்வியைத் தழுவினார்.
இவருக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பொருட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப பள்ளி அருகே இரும்புச்சங்கிலியால் நாயை தூக்கிலிட்ட மர்ம நபருக்கு வலைவீச்சு. அதிர்ச்சி புகைப்படம்
01-07-2014
இங்கிலாந்து நாட்டில் Dudley என்ற நகரில் ஆரம்ப பள்ளி அருகே இரும்புச்சங்கிலி ஒன்றினால் நாய்க்குட்டி ஒன்று தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Dudley என்ற நகரில் கடந்த சனிக்கிழமை காலையில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த ஒரு நபர் ஒரு வீட்டின் சுவரில் நாய் ஒன்று இரும்பு சங்கிலியால் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் காவல்துறையினர்களுக்கும் (RSPCA ) Royal Society for the Prevention of Cruelty to Animal என்ற அமைப்புக்கும் தகவல் கொடுத்தார். நாய் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த கட்டிடத்தின் மிக அருகே சிறுவர்கள் கல்வி பயிலும் மழலையர் பள்ளி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் தெரிந்த உடனே விரைந்து வந்த போலீஸார் மற்றும் (RSPCA) அமைப்பினர் நாயை சங்கிலியில் இருந்து விடுவித்து சோதனை செய்து பார்த்தில் அந்த நாய் இறந்துபோனதை உறுதி செய்தனர்.
அந்த நாய்க்கு ஒன்று முதல் இரண்டு வயதே இருக்கும் என்றும் மிகக்கொடூரமாக யாரோ மர்ம நபர் ஒருவர் சங்கிலியால் நாயின் கழுத்தில் கட்டி தொங்கவிட்டிருப்பதாகவும் கூறினர்.
அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் அந்த சம்பவம் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த பல வருடங்களில் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவத்தை தாங்கள் பார்த்ததில்லை என்றும் குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என்றும் போலீஸாரும், (RSPCA) அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்