நாவலப்பிட்டி பகுதியில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுமியின் தந்தையும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
அதேநேரம் இந்த சம்பவத்திற்கு உதவிய ஒரு பெண்ணும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 6 சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.