இலங்கையில் தமிழ் மக்களுக்கு போலீஸ் அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் வல்லமை பெற்ற ஒருவர் நமது கட்சியில் உள்ளது, கட்சிக்கும் பெருமை, நாட்டுக்கும் பெருமை, தமிழினத்துக்கே பெருமை” என்று தெரிவித்துள்ளார்,
இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் அவ்வப்போது தமது அதிரடிக் கருத்துக்களால் சுவாரசியத்தை ஏற்படுத்தும் க.சிவாஜிலிங்கம்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் பரவிப்பாஞ்சான் என்ற கிராமத்தை சேர்ந்த மக்களுக்காக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவாஜிலிங்கம், “இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் (13-வது சட்டப்பிரிவு) கூறப்பட்டுள்ள போலீஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும். அவர்களாக தராவிட்டால், அந்த அதிகாரத்தை நாமே எடுத்துக் கொள்வோம்” என வீராவேசமாக தெரிவித்தார்.
இவர் இவ்வாறு கூறியதும், பரவிப்பாஞ்சான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக (தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பாதுகாப்பு அல்ல) அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸார் திக்பிரம்மை கொண்டவர்களாக சிவாஜிலிங்கத்தை அச்சத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர்.
தொடர்ந்து ஆவேசக் குரலெழுப்பிய சிவாஜிலிங்கம், “போலீஸ் அதிகாரத்தை எமக்கு ஏன் வழங்க முடியாது என்பதற்கு அரசு விளக்கம் தரவேண்டும். போலீஸாரை அதிகாரம் செய்யும் அளவுக்கு வல்லமை பெற்றவர்கள் எம்மிடம் இல்லை என அரசு கருதுகிறதா?
இதே வன்னிப் பகுதியில் இலங்கை போலீஸாரை அடக்கிய வல்லவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. (மேலே போட்டோவில் உள்ளவர்) அவர்களும் நமது கட்சியை சேர்ந்தவர் என்பதை அரசு உணர வேண்டும்.
அவர் போலீஸ் மீது அதிகாரம் செலுத்திய அழகை அரசு கண்டிருந்தால், அப்போதே போலீஸ் அதிகாரத்தை எமக்கு கொடுத்திருக்க வேண்டும். அரசுக்கு தேவையென்றால், அந்த வீடியோ ஆதாரத்தை அனுப்பி வைக்க நமது கட்சி தயாராக உள்ளது” என்றார்.
இதைக் கேட்ட பரவிப்பாஞ்சான் மக்கள் பலத்த கரகோஷம் எழுப்பிய நிலையில், இங்கிருந்த போலீஸார் தமது முகத்தில் இருந்த வியர்வையை துடைத்துக் கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி சார்பில் இலங்கை அரசுக்கு அனுப்புவதாக இவர் கூறிய வீடியோ ஆதாரம், கீழேயுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரும் போலீஸ் அதிகாரத்தை இதில் காணலாம்:
தொடர்புடைய செய்திகள்