நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி காதல் என்ற போர்வையில் 23 வயது இளைஞனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
யாழ்., இளவாலை, பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அராலி வீதி சுழிபுரத்தினைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா வியாழக்கிழமை (24) இரவு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மேற்படி சிறுமியினை கைதடிச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்துப் பராமரிக்கும்படியும் நீதவான் பொலிஸாரிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இது பற்றித் தெரியவருவதாவது,
பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த மேற்படி 15 வயதுச் சிறுமிக்கும் மேற்படி சந்தேக நபருக்கும் நயினாதீவு அம்மன் ஆலயத்திற்குச் சென்றிருந்த தருணத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இருவரும் பரஸ்பரம் தொலைபேசி இலக்கங்களைப் பகிர்ந்து, காதல் வளர்த்து கடந்த 19ஆம் திகதி மேற்படி சிறுமியினை பறாளை முருகன் ஆலயத்திற்கு அருகில் அழைத்துச் சென்ற மேற்படி நபர் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு, சிறுமியினை வீட்டிற்குச் செல்லும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
தொடர்ந்து சிறுமி, பஸ் ஏறி யாழ். நகரம் வந்து, நயினாதீவிலுள்ள தனது பாட்டியினைத் தேடிச் சென்றுள்ளார். பாட்டி, அச்சிறுமியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமி, வீட்டுக்குச் செல்லாது தனது நெல்லியடியிலுள்ள நண்பியின் வீட்டிலும் 2 நாட்கள் சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில், சிறுமியினைக் காணவில்லையென சிறுமியின் தாயார் கடந்த 19ஆம் திகதி இளவாலைப் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். மேற்படி சந்தேகநபருடன் தமது மகள் கதைப்பதினை அறிந்திருந்த, சிறுமியின் பெற்றோர் இளைஞனின் வீட்டிற்குச் சென்று சண்டை பிடித்துள்ளனர்.
தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை (24) சிறுமி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு நின்றிருந்த ஒருவரின் தொலைபேசியினை வாங்கி தனது காதலனின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்போது, உஷாரடைந்த மேற்படி சந்தேகநபர், வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சென்று, மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமியொருவர் அநாதரவாக நிற்பதாகவும் அவரை மீட்கும்படியும் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இளவாலைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்ததினை அடுத்து, இளவாலைப் பொலிஸார் முறைப்பாட்டாளரையும் அழைத்துக்கொண்டு, பேருந்து நிலையத்திற்குச் சென்று சிறுமியினை மீட்டனர்.
தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை செய்த போது, மேற்படி சந்தேகநபர் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (25), சிறுவர் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
இணுவிலில் தம்மைக் காதலிக்குமாறு யுவதி ஒருவரைத் தொல்லைப்படுத்தியவா்கள் கைது
July 25th, 2014
யாழ்., இணுவில், மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்குச் நேற்று திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்டஅதேயிடத்தினைச் சேர்ந்த 4 இளைஞர்களை இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதேயிடத்தினைச் சேர்ந்த 20, 23, 24 மற்றும் 26 வயதுடைய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி 4 இளைஞர்களில் ஒருவர் மேற்படி யுவதியினைக் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும், அதற்கு அந்த யுவதி மறுப்புத் தெரிவித்த நிலையில், அவ்விளைஞனைக் காதலிக்க வற்புறுத்தியே மேற்படி இளைஞர்கள் கலாட்டாவில் இடம்பெற்றுள்ளனர்.
மேற்படி 4 இளைஞர்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு ஆணுறுப்பைக் காட்டிய காவாலி சிறையில் அடைப்பு
25-07-2017
சிறுமி ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இளைஞர் சிறுவர் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.குருநகர் கடற்கரை வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு குருநகர் 5 ஆம் மாடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் போதே குறித்த இளைஞர் ஆணுறுப்பினை காட்டியுள்ளார்.குறித்த சிறுமி பெற்றோருக்கு கூறியதை தொடர்ந்து பெற்றோர் யாழ். பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை யாழ்.குருநகர் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது இளைஞனை ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதால் கத்திக் குத்துக்கு இலக்கான கமலநாதன்
25-07-2014
கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கேட்கச் சென்றவர் மீது கடன் வாங்கியவர் கத்தியால் குத்திய சம்பவம் யாழ்., அரசடிப் பத்திரகாளி கோவிலடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், அதேயிடத்தினைச் சேர்ந்த 53 வயதுடைய ந.கமலநாதன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்., போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி படுகாயமுற்றவர், தனது உறவினர் ஒருவரிற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கைமாற்றாகக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கேட்கச் சென்ற வேளையிலே கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.