மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கே இன்று அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, இதில் இரண்டாவது சந்தேகநபரான சண்முகநாதன் சுதாகரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து இன்று இவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2008ம் ஆண்டு அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 வயது சிறுமியை மணம்செய்ய முயற்சித்த இராணுவ வீரர் கைது
கண்டி – ஹத்தரலியத்தைப் பொலிஸ் பிரிவில் பாடசாலை சிறுமி ஒருவரைத் திருமணம் செய்ய முயற்சித்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை செல்லும் 15 வயது மாணவி ஒருவருக்கும் 21 வயது இராணுவ வீரர் ஒருவருக்கு மிடையே காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இருதரப்பையும் சோ்ந்த சில பெண்கள் இணைந்து இருவருக்குமிடையே பதிவுத் திருமணம் செய்து வைக்க விவாகப் பதிவாளர் ஒருவரிடம் சென்றுள்ளனர்.
மாணவியின் வயது பற்றி சந்தேகம் எழுந்த விவாகப் பதிவாளர் பொலிஸ் நிலையம் சென்று அத்தாட்சிக் கடிதம் கொண்டு வரும்படி கூறியுள்ளார். பொலிஸ் நிலையம் சென்றபோது மேற்படி சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து வைத்திய பரிசோதனைக்கு சிறுமியை உட்படுத்தி நீதி மன்றில் ஆஜர் செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபசார விடுதி சுற்றி வளைப்பு: விபசாரத்திற்கு ஆயத்தமாயிருந்த பெண்களும் கைது
05-09-2014