2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.
இந்த தடுப்பூசிகளுடன் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சினோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிகரிக்கும் என, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.