6,000 பெயர்கள் அடங்கிய இவர்களது பட்டியலில், ராணுவ அதிகாரிகளின் 3 வயதுக் குழந்தைகள்கூட உள்ளார்கள். அதாவது, 2009-ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தபோது பிறந்திராத குழந்தைப் போர்க் குற்றவாளிகள்!
“இந்தப் பட்டியலில் காணப்படுவோர் உண்மையில் போர்க் குற்றங்களை இழைத்தார்களா என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் தமிழ் அமைப்பைச் சேர்ந்த ஆழியன், “இது குறித்த ஆதாரங்களை நாங்கள் ஐ.நா. போன்ற அமைப்புகளுக்கு தரவுள்ளோம்” என்று கூறினார்.
“ஆனால் போரில் ஈடுபடாத ராணுவத்தினரின் குடும்பத்தினரின் போட்டோக்களையும் பட்டியலில் இணைத்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆழியன், “ராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும்போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்தது.
எனவே ராணுவத்தினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்களது மனைவி, மற்றும் குழந்தைகள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும். எனவே அவர்களும் போர்க் குற்றவாளிகள்தான்” என்றார்.
premium-id“என்ன இருந்தாலும், பிரிட்டனில் இருந்து இயங்கும் ஒரு தமிழர் அமைப்பு, இலங்கை ராணுவத்தினர் பலரது வீடுகளுக்கு சென்று குடும்ப சமேதராக அவர்களை போஸ் கொடுக்க வைத்து போட்டோக்களை எடுக்க முடிந்திருக்கிறதே… அந்த வகையில் தமிழர் அமைப்பினர் திறமைசாலிகள் அல்லவா” என்று சிலாகிக்கலாம் என்பது எமது ஆசை.
ஆனால், அந்த ஆசையை நிராசையாக்கும் வகையில், ராணுவத்தினரின் இந்த பேமிலி குரூப் போட்டோக்கள் அனைத்தும், இலங்கை ராணுவத்தினரின் பப்ளிக் இணையதளத்தில் உள்ளன.
அதாவது மவுஸில் ‘ரைட் கிளிக்’ செய்து திரட்டப்பட்ட ஆதாரங்கள்!
இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் தேதிகள், மற்றும் திருமண நாள் ஆகியவையும், போர்க்குற்ற பட்டியலில் உள்ளன.
ஒருவேளை ராணுவ அதிகாரியின் மனைவி திருமணம் செய்த அன்றே போர்க்குற்றவாளி ஆனார் என்று சொல்ல வருகிறார்களா.., குழந்தைகள் பிறந்த தேதியில் இருந்து போர்க்குற்றவாளிகள் ஆனார்கள் என்று சொல்ல வருகிறார்களா…, அல்லது, wedding anniversary என்பதும் ஒருவரது பெயர் என்று நினைத்து வெளியிட்டார்களா என்பது சரியாக தெரியவில்லை.
எதற்கும், போர்க் குற்றவாளிகள் 4 பேரின் போட்டோவை கீழே கொடுத்துள்ளோம். பார்த்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்.
எப்படியோ, இந்த மூன்றில் இருந்து அறுபது வரை வயதான போர்க் குற்றவாளிகளின் பட்டியல், மற்றும் போட்டோக்களை ஐ.நா.வில் கொடுக்கவுள்ளார்கள். ஐ.நா.க்காரர்கள் “நீங்க கவலைப்படாம போங்க பாஸ்.. நாங்க பாத்துக்கிறோம்” என்று சொல்லி அனுப்புவார்கள். வெளிப்படையாக சிரிக்க மாட்டார்கள்.
இது தொடர்பாக பிபிசி தமிழோசை, இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் கேட்டபோது, அவர், “இதை ஒரு நல்ல நகைச்சுவையாகவே நாங்கள் கருதுகிறோம்.
இந்த போட்டோக்கள் அனைத்தும் இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் உள்ளன. அந்த இணையளதளம் பொதுமக்களின் பார்வைக்காக உள்ளது.
விளம்பரத்துக்காகத்தான் நாங்கள் எங்கள் படையினரின் போட்டோக்களை இணையதளத்தில் வெளியிடுகிறோம். எமது விளம்பர நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு போன்ற யாராவது உதவ முன்வந்தால் அது எங்களுக்கு மகிழ்ச்சிதானே. அதைப்பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்றார்.
எப்படியோ, போர்க்குற்றவாளிகள் என்ற சீரியசான விஷயத்தை, காமெடியாக்கி ஐ.நா. வரை கொண்டு போகிறது இந்த பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு.
அய்யா பிரித்தானிய தமிழ் ஒன்றியமே.. நீங்க யாரு? இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க? இதற்குமுன் இதேபோல தமாஷாக வேறு ஏதாச்சும் பண்ணியிருக்கிறீர்களா?
போரில் ஈடுபட்ட இராணுவதினர் அனைவரும் போர் குற்றவாளிகள் என்றால்….. 49ஆயிரம் மாவீரர் குடும்பங்களும், சரணடைந்து முன்னாள் போராளிகளின் குடும்பங்களும் முக்கியமாக அனந்தி சசிதரன் போன்றோரும் குற்றவாளிகள் தானே?